தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் தயாராகும் படம் லட்சுமியின் என்.டி.ஆர். ராம்கோபால் வர்மா இயக்கும் இந்த படம் நடிகரும், ஆந்திர முதல்வருமான என்டிஆரின் வாழ்க்கை கதையில் தயாராகிறது. தற்போது கதை விவாதம் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை தொடங்கி அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதை குறித்து ராம்கோபால்வர்மா கூறுகையில், என்.டி.ஆரின் வாழ்க்கையில் லட்சுமி பார்வதி என்ட்ரி கொடுத்த போதில் இருந்து இந்த படத்தின் கதை தொடங்குகிறது. 18 அத்தியாயங்கள் கொண்டது என்டிஆரின் வாழ்க்கை. அதில் ஒரு அத்தியாயத்தை மட்டுமே இந்த படத்தில் சொல்லப்போகிறேன். ஆனால் இது கண்டிப்பாக அரசியல் படமில்லை. என்டிஆரின் சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கைதான் அதிகமாக இடம்பெறுகிறது என்கிறார்.