ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். தமிழில் அஜீத் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு படத்தை அடுத்து, தற்போது தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆந்திராவில் வரப்போகிற சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடவும் தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர்.
இந்த நிலையில், நேற்று காலை ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பவன் கல்யாணின் மனைவி அன்ன லெஸ்னெவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். பவன் தனது குழந்தையை கையில் வைத்தபடி எடுத்துக்கொண்ட போட்டோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.
பவன் கல்யாணுக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இப்போது பிறந்துள்ள ஆண் குழந்தையோடு சேர்த்து நான்கு குழந்தைகள் உள்ளனர். பவன் கல்யாணுக்கு அன்ன லெஸ்னொ மூன்றாவது மனைவியாவார். பவன் இதற்கு முன்னர் நந்தினி, ரேணு தேசாயை மணந்து பின்னர் அவர்களை விவாகரத்து செய்துவிட்டார்.