தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சங்கத்தில் அரசியல் புகுந்தால் என்னவெல்லாம் கூத்துக்கள் நடக்கும் என்பதை இங்கே தமிழ் திரையுலகில் கண்கூடாக பார்த்து வருகிறது. அதேசமயம் அரசியல் சாயம் கொஞ்சம் கூட இல்லாமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கட்டுக்கோப்பாக இயங்கி வந்த மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் கடந்த சில வருடங்களாக அரசியல் தனது மூக்கை நுழைத்துள்ளது. குறிப்பாக நடிகர்களாக இருந்த இன்னொசன்ட், கே.பி.கணேஷ்குமார், முகேஷ், ஜெகதீஷ்குமார், லேட்டஸ்ட்டாக சுரேஷ்கோபி உள்ளிட்ட பலரும் ஏதோவொரு அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களாக ஆனபின், 'அம்மா'வின் நிலை நம்ம ஊரைப்போலவே ஆகிவிட்டது.
குறிப்பாக நடிகர் திலீப் விவகாரம் பெரிதான சமயத்தில் இது நன்றாகவே வெளிப்பட்டது. திலீப் தவறு செய்துவிட்டார், அவரை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் அப்பாவி, அவர் மீதான குற்றத்திற்கு ஆதாரம் இல்லை, அவையெல்லாம் வீண்பழி சுமத்தும் விஷயங்கள் அதனால் அவரை நீக்க கூடாது என்றும் முக்கிய நடிகர்கள், குறிப்பாக அரசியல்வாதிகளாக உள்ள நடிகர்கள் இரண்டு பிரிவாக மோதும் அபாயமும் உருவாகியுள்ளது. இதில் முகேஷ், கே.பி.கணேஷ்குமார் போன்றவர்கள் திலீப்பின் பக்கம் ஆதரவாக நிற்கின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் ஜாமீனில் திலீப் விடுதலையாகி வெளிவந்ததை தொடர்ந்து, ஒரு பொது நிகழ்வில் பேசிய நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ், “சில அரசியல் சக்திகள், குறிப்பாக இடதுசாரி அரசியலுக்கு எதிரான கட்சிகள் திலீப் விவகாரத்தை ஊத்தி பெரிதாக்கி நடிகர் சங்கத்தை உடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. அவர்கள் எண்ணம் பலிக்காது. முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இப்படி விஷமா பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நபர்களை அடையாளம் தெரியும். அவரும் இது தொடர்பாக அவர்களை எச்சரித்துள்ளார்” என கூறியுள்ளார் நடிகர் முகேஷ்.