ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஐஸ்வர்ய லட்சுமி. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் தயாராகி வரும் 'மாயநதி' படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. இந்தப்படத்தில் மலையாள சினிமாவில் வளர்ந்து இளம் ஹீரோவான டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பஹத் பாசில் நடித்து ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்கு கதை எழுதிய ஷ்யாம் புஷ்கரன் தான் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை எழுதியுள்ளார். படத்தின் கதைக்கான கருவை இயக்குனர் அமல் நீரத் கொடுத்துள்ளார்.
இந்தப்படத்திற்காக ஐஸ்வர்ய லட்சுமி சாதாரணமாக தேர்வு செய்யப்பட்டு விடவில்லை. நடிப்பு தவிர உடையலங்காரம், சிகையலங்காரம் என பலகட்ட ஆடிசன்களுக்குப் பிறகே இவர் தேர்வானார். ஆனாலும் படத்தில் நடித்த ஆரம்ப நாட்களில், இந்தப்படத்தில் தான் தேர்வானதை ஐஸ்வர்ய லட்சுமியால் நம்பவே முடியவில்லையாம். ஏதோ தெரியாமல் தன்னை தேர்வுசெய்து விட்டார்கள், திடீரென ஒருநாள் தன்னை வெளியேற்றினாலும் வெளியேற்றலாம் என்றெல்லாம் கூட நினைத்தாராம். 'துப்பறிவாளன்' நாயகி அணு இம்மானுவேல் கூட துல்கரின் படத்தில் அப்படி சில நாட்கள் நடித்தபின் விலக்கப்பட்டவர் தான். ஆனால் தனக்கு அவ்வாறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்து முழு அர்ப்பணிப்பையும் இந்தப்படத்தில் கொடுத்து நடித்துள்ளாராம் ஐஸ்வர்ய லட்சுமி.