பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
1984ல் கேரளாவில் புகழ்பெற்ற கொலை வழக்கு தான் சாக்கோ கொலை வழக்கு. சுகுமார குறூப் என்கிற கிரிமினல் தன்னுடைய இன்சூரன்ஸ் பணம் 8 லட்ச ரூபாயை குறுக்கு வழியில் பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட, தன்னைப்போலவே இருந்த சாக்கோ என்பவரை உயிருடன் காரில் வைத்து எரித்துக் கொன்றான்.
பின்னாளில் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது. ஆனாலும் போலீஸில் அவன் சிக்கவில்லை.. முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் அவனை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சுகுமார குறூப்பின் வாழ்க்கை தற்போது படமாக இருக்கிறது. அந்த கேரக்டரில் தான் துல்கர் சல்மான் நடிக்கிறார்..
'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். சினிமாவுக்காக இந்த சுகுமார குறூப் கேரக்டரில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்களாம். பொதுவாக கிரிமினல்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும்போது அவர்களை ஹீரோவாக காட்டுவது தான் வாடிக்கை. ஆனால் இந்தப்படத்தை பொறுத்தவரை சுகுமார குறூப்பின் நல்லது, கெட்டது என இரண்டு பக்கங்களையும் சரிசமமாக காட்ட இருக்கிறோம் என்கிறார் துல்கர் சல்மான். குறிப்பாக சுகுமார குறூப்பின் புகழ்பாடும் படமாக இது இருக்காது என உறுதியாக கூறுகிறார் துல்கர் சல்மான்.