ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் 'துருவங்கள் பதினாறு' போல சில வித்தியாசமான படைப்புகளுக்கு தனது நடிப்பால் உயிர் கூட்டியவர் தான் நடிகர் ரகுமான். மலையாள திரையுலகில் சில காலம் ஹீரோவுக்கு நண்பனாக, இல்லையென்றால் வில்லன்களில் ஒருவராக பயன்படுத்தி வந்தார்கள். ராஜேஷ் பிள்ளை, ரோஷன் ஆண்ட்ரூஸ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் தான் ரகுமானை வேறு பரிமாணத்தில் காட்டினார்கள். அப்படி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய மும்பை போலீஸ் படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ரகுமான்.
அந்தப்படத்தில் நாயகன் பிருத்விராஜுக்கு இணையாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் பிருத்விராஜுடன் இணைந்து 'ரணம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் நிர்மல் சகாதேவ் இயக்குகிறார். இந்தப்படத்தில் ரகுமானுக்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவிலேயே யாரும் நடித்திராத ஒரு கேரக்டரை கொடுத்துள்ளாராம் நிர்மல் சகாதேவ். முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப்படம் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.