பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டம் மூலம் இந்தியாவை சுத்தமான, ஆரோக்யமான பூமியாக மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா பிரபலங்களில் ஆதரவினை நாடினார் பிரதமர் மோடி. அதையடுத்து அக்டோபர் 2-ந்தேதி இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறயிருக்கும் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கலந்து கொள்ள சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார் மோடி.
ஹிந்தி சினிமா நடிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய நடிகர்கள் பலருக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். மலையாளத்தில் மம்மூட்டியைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபு, பிரபாசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இவர்களில் பிரபாஸ், தூய்மை இந்தியா திட்டத்தில் பங்குபெற தனக்கு வாய்ப்பளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கடிதம் எழுதியிருப்பவர், தூய்மை இந்தியா திட்டத்துக்கு எனது முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறாராம். அதோடு, தூய்மை இந்தியா திட்டம் சம்பந்தமாக தனது ரசிகர் மன்றங்களையும் களமிறக்குகிறாராம் பிரபாஸ்.