ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
வெப்பம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நானி. அதையடுத்து நான் ஈ படத்தில் நடித்து பிரபலமான அவர், பின்னர் தமிழ், தெலுங்கில் உருவான ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நீ தானே என் பொன் வசந்தம், நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர், தற்போது பல்லாண்டு வாழ்க என்ற படத்திலும் நட்புக்காக நடிக்கிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் நானி. தற்போது எம்.சி.ஏ, கிருஷ்ணாஜூனா யுத்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் எம்சிஏ டிசம்பரில் திரைக்கு வருகிறதாம். அதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கிருஷ்ணாஜூனா யுத்தம் வெளியாகிறதாம். இதில் எம்சிஏ படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருக்கிறார்.
தெலுங்கில் சாய்பல்லவி நாயகியாக நடித்த பிடா படம் அவரை பிரபலப்படுத்தியிருப்பதை அடுத்து, நானியின் எம்சிஏ படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாயகி வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். எப்போதுமே நானியின் படங்களில் அவரைச்சுற்றியே கதை இருக்கும். என்றாலும், சாய் பல்லவியின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவருக்கு தனது படத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் நானி. அந்த வகையில், பிடா படத்தை அடுத்து எம்சிஏ, கரு ஆகிய படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி.