பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மலையாள சினிமாவில் இயக்குனர் பாசிலின் மகன் பஹத் பாசில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் வரை பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி ஹீரோவாகவும் ஆகிவிட்டார்கள். அதேபோல சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்த மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியும் கடந்த வருடம் தனது மகன் கோகுல் சுரேஷை 'முதுகாவ்' என்கிற படம் மூலமாக ஹீரோவாக களமிறக்கினார். ஆனால் அந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை..
இந்த நிலையில் அடுத்ததாக 'மாஸ்டர் பீஸ்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் கோகுல் சுரேஷ். ஏற்கனவே மம்முட்டியை வைத்து 'ராஜாதி ராஜா' என்கிற படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டியுடன் நிறைய காட்சிகளில் கோகுல் இணைந்து நடிக்க இருப்பதால், இந்தப்படம் வெளியானதும் ரசிகர்களிடம் ஓரளவு அவர் பிரபலமாக வாய்ப்பு இருக்கிறது.
கோகுலின் தந்தை சுரேஷ்கோபியும், அவர் நடிகரான அறிமுகமான காலகட்டத்தில் மம்முட்டியுடன் நிறைய படங்களில் இணைந்து நடித்ததால் தான் ரசிகர்கள் மத்தியில் நன்கு தெரிந்த முகமானார் என்பது வரலாறு. விஜய்யையும் சூர்யாவையும் நம்ம விஜயகாந்த் ஆரம்பத்தில் கைதூக்கி விட்ட வேலையைத்தான் இப்போது மம்முட்டியும் செய்ய இருக்கிறார்.