ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'பறவ' படமும் இந்த ஓணம் ரேசில் கலந்து கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டு தற்போது செப்-21க்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நேற்று ரிலீசாகியுள்ளது. துல்கர் சல்மானின் நண்பரும் அவருடன் இணைந்து நான்கு படங்களில் காமெடி நடிகராக நடித்தவருமான 'பிரேமம்' புகழ் சௌபின் சாஹிர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். புறா பந்தயத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் துல்கர் தான் ஹீரோ என சொல்ல முடியாவிட்டாலும், படம் முழுவதும் வரும் வகையில் நீட்டிக்கப்பட்ட ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் துல்கர். நேற்று இந்தப்படம் வெளியாகியுள்ள நிலையில் தனது ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
“இந்தப்படம் பார்க்கும் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் தியேட்டரில் எனது காட்சிகளை படம்பிடிப்பதோ, அல்லது பாடல்கள், சண்டைக்காட்சிகளை படம்பிடிப்பதோ, மற்றும் அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதோ கூடாது” என்று கூறியுள்ளார். தவறான நோக்கத்துடன் நீங்கள் காட்சிகளை படம் பிடிக்காவிட்டாலும்கூட, அது சட்டப்படி தவறான விஷயம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் துல்கர் சல்மான்.