ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக மலையாள திரையுலகம் ஆயுதபூஜை விழாவை படங்களை ரிலீஸ் செய்யும் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்வதில்லை. அதை தொடர்ந்து வரும் தீபாவளியையும் அப்படித்தான் தமிழ்ப்படங்களின் ரிலீஸுக்காக தாரை வார்த்து விடுகின்றன. ஆனால் இந்தமுறை திலீப்பின் 'ராம்லீலா' மற்றும் அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் நடித்துள்ள உதாகரணம் சுஜாதா என இரண்டு படங்கள் ஆயுத பூஜை ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
இந்தநிலையில் ஆயுதபூஜை ரிலீசாக தனுஷின் படம் கேரளாவில் களம் இறங்க இருப்பது ஆச்சர்யமான ஒன்று. ஆம், ஒரு தயாரிப்பாளராக தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் 'தரங்கம்' என்கிற படத்தை தயாரித்திருப்பதன் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்தபடம் வரும் செப்-29ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. டொமினிக் அருண் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இளம் நாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்க, சாந்தி பாலச்சந்திரன் என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார்.