ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் யார் என கேட்டால் அனைவரின் விரல்களும் ஒருமித்து சுட்டிக்காட்டுவது இயக்குனர் சத்யன் அந்திக்காடு பக்கமாகத்தான் இருக்கும். அன்றும் இன்றும் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் பிரபலமாக வலம் வந்த பல நடிகைகள் இவரது கண்டுபிடிப்பு தான். அப்படிப்பட்ட இயக்குனரின் படங்கள் தான் தனது பேவரைட் என கூறியுள்ளார் விஜய்சேதுபதி..
சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய்செதுபதி, தான் சின்னசின்ன கேரக்டர்களில் நடித்து வளர்ந்து வந்த நேரத்தில் மலையாள படங்களை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறியுள்ளார். குறிப்பாக, பரதன், கமல், சத்யன் அந்திக்காடு ஆகியோரின் படங்களை விரும்பிப் பார்ப்பேன் என்றும், சத்யன் அந்திக்காடுவின் வீண்டும் சில விசேஷ காரியங்கள், பாக்யதேவதா போன்ற படங்கள் தனக்கு பிடித்தமானவை என்றும் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.