வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சிறைத்தண்டனை அனுபவித்த சஞ்சய் தத் படங்களை மக்கள் பார்க்கிறார்கள் என்றால் திலீப்பின் படங்களையும் அவர்கள் பார்ப்பதில் என்ன சங்கடம் இருந்துவிட போகிறது... சஞ்சய் தத்துக்கு ஒரு நியாயம்.. திலீப்புக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார் மலையாள இயக்குனரும் நடிகருமான 'ஷட்டர்' புகழ் ஜாய் மேத்யூ.
தற்போது நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மலையாள நடிகர் திலீப்பின் ராம்லீலா படம் வரும் செப்-28ல் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்காதீர்கள் என ஒரு பிரிவினர் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் ஜாய் மேத்யூ.
பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் சொந்த வாழ்க்கையின் சங்கட நிகழ்வுகள் அவர்களது படங்களை எந்தவிதத்தில் பாதிக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது.. பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் விஷயத்திலும், சஞ்சய் தத் விஷயத்திலும் இதுபோன்ற கணிப்புகள் தவறாக போயுள்ளன. அவர்கள் தவறு செய்தார்கள் என்று கைது, வழக்கு விவகாரங்கள் நடந்தபின்னும் கூட அதன்பின் வெளியான அவர்களது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பவே செய்தன.
ஆனால் அந்த இருவரின் வழக்கு விஷயத்தில் இருந்து மாறுபட்டது மலையாள நடிகர் திலீப்பின் விவகாரம். நடிகை விவகாரத்தில் கைதாகி சமீபகாலமாக சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் படம் தற்போதைய சூழலில் ரிலீஸானால் அதற்கு மக்களிடம் எந்த விதமான வரவேற்பு இருக்கும் என்கிற கேள்வி பலரிடமும் இருக்கிறது..
அந்த ரீதியில் தான் இப்படி கேள்வி எழுப்பியுள்ள இயக்குனர் ஜாய் மேத்யூ, தான் எப்போதும் பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் ஆதரவாக நிற்பவன் தான் என்றும் ஒரு நல்ல படம், நடிகரை முன்னிறுத்தி பிரச்சனையில் சிக்குவதால் ஒரு அறிமுக இயக்குனரின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதால் தான் இப்படி கேள்வி எழுப்பினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதே ஜாய் மேத்யூ தான் திலீப் கைது செய்யப்பட்டபோது திலீப்புடன் பணியாற்றி இருக்கிறோம் என்பதை நினைக்கும்போதே அவமானமாக உணர்கிறேன்.. வெட்கப்படுகிறேன் என கூறியவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.