பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகை விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 65 நாட்களாகின்றன.. இந்த காலகட்டத்தில் திலீப்பின் ஜாமீன் மனு இரண்டுமுறை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு மணி நேர சிறப்பு அனுமதியில் சிறையிலிருந்து வெளியேறி தனது தந்தையின் நினைவு நாள் சடங்குகளை முடித்துவிட்டு உடனே சிறைக்கு திரும்பிவிட்டார். இந்தநிலையில் மூன்றாவது முறையாக ஜாமீன் அளிக்குமாறு திலீப் மனு செய்யவுள்ளார்..
இதற்கு முன் திலீப்பின் நண்பர் இயக்குனர் நாதிர்ஷா தனக்கு முன்ஜாமீன் கேட்திருந்த மனுவின் மீது விசாரணை செய்த நீதிபதி, போலீசாரிடம் சராமரியாக சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக “எதற்காக இந்த ஆறு மாதங்களாக இந்த வழக்கின் விசாரணையை சினிமா திரைக்கதை போல இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள்.. இதன்மூலம் யாரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறீர்கள்” என கேள்விகளை எழுப்பினார். திலீப் கைது செய்யப்பட்ட இந்த 65 நாட்களில் போலீசார் அவருக்கு எதிராக குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார்களே தவிர அவருக்கெதிரான ஸ்திரமான ஆதாரம் எதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.