இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேரளாவில் நடிகை கடத்தல் விவகாரத்தில் முதல் குற்றவாளியாக போலீசிடம் சிக்கிய பல்சர் சுனில், தினசரி ஏதோ ஒரு விவகாரமான செய்தியை கொளுத்திப்போட்டு வருகிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனை மேடம் என குறிப்பிட்டு போலீசாரின் பார்வையை அவர் பக்கமும் திருப்பினார். இந்தநிலையில் திலீப்பின் வலதுகரம் என சொல்லக்கூடிய அளவுக்கு அவரது நண்பராக விளங்கும் இயக்குனர் நாதிர்ஷா மீது புதிதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் பல்சர் சுனில்.
நடிகை கடத்தல் விவகாரத்தில் திலீப்பின் பெயர் அடிபட ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை, அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து வருபவர் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா தான். அதனால் தான் போலீஸாரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது. இதனால் தானும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த நாதிர்ஷா தனது முன் ஜாமீனுக்காகவும் விண்ணப்பித்துள்ளார். இந்தநிலையில் தனக்கு 25 ஆயிரம் ரூபாயை நாதிர்ஷா மூலமாக திலீப் தந்ததாக தற்போது கூறியுள்ளார் பல்சர் சுனில்.
இந்த தொகையை நாதிர்ஷா இயக்கிவந்த 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தின் ஷூட்டிங் தொடுபுழாவில் நடைபெற்று வந்தபோது அந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் நாதிர்ஷாவிடம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள தகவலை உறுதி செய்யும் விதமாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குறிப்பிட்ட தேதியில் தொடுபுழாவில் இருந்ததை அவரது மொபைல் டவர் காட்டியதாம். அந்த டவர் காட்டிய பகுதியில் அதே தேதியில் நாதிர்ஷா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனராம்.