பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கேரளாவில் நடிகை கடத்தல் விவகாரத்தில் முதல் குற்றவாளியாக போலீசிடம் சிக்கிய பல்சர் சுனில், தினசரி ஏதோ ஒரு விவகாரமான செய்தியை கொளுத்திப்போட்டு வருகிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனை மேடம் என குறிப்பிட்டு போலீசாரின் பார்வையை அவர் பக்கமும் திருப்பினார். இந்தநிலையில் திலீப்பின் வலதுகரம் என சொல்லக்கூடிய அளவுக்கு அவரது நண்பராக விளங்கும் இயக்குனர் நாதிர்ஷா மீது புதிதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் பல்சர் சுனில்.
நடிகை கடத்தல் விவகாரத்தில் திலீப்பின் பெயர் அடிபட ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை, அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து வருபவர் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா தான். அதனால் தான் போலீஸாரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது. இதனால் தானும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த நாதிர்ஷா தனது முன் ஜாமீனுக்காகவும் விண்ணப்பித்துள்ளார். இந்தநிலையில் தனக்கு 25 ஆயிரம் ரூபாயை நாதிர்ஷா மூலமாக திலீப் தந்ததாக தற்போது கூறியுள்ளார் பல்சர் சுனில்.
இந்த தொகையை நாதிர்ஷா இயக்கிவந்த 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தின் ஷூட்டிங் தொடுபுழாவில் நடைபெற்று வந்தபோது அந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் நாதிர்ஷாவிடம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள தகவலை உறுதி செய்யும் விதமாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குறிப்பிட்ட தேதியில் தொடுபுழாவில் இருந்ததை அவரது மொபைல் டவர் காட்டியதாம். அந்த டவர் காட்டிய பகுதியில் அதே தேதியில் நாதிர்ஷா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனராம்.