ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
கடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின. நான்குமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தான். அதில் பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கி, மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்', மம்முட்டி நடிப்பில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா', பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஆடம் ஜான்' மற்றும் 'பிரேமம்' கூட்டணியில் நிவின்பாலி நடிப்பில் உருவான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' ஆகிய நான்கு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வெளியாகின.
ஆனால் பிளாக் பஸ்டர் என்றோ, சூப்பர் ஹிட் என்றோ, அவ்வளவு ஏன் ஹிட் என்றோ சொல்லும் அளவுக்கு கூட எந்தப்படமும் அமையவில்லை. இதில் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ஏமாற்றம் தந்தாலும் கடந்த பத்து நாட்களில் வசூல் ரீதியாக சுமார் 15 கோடிகளை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் 11.௦7 கோடி, மம்முட்டியின் 'புள்ளிக்காரன் ஸ்டாரா' படம் 10.54 கோடியும் பிருத்விராஜின் ஆடம் ஜான் 9.64 கோடியும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதில் விமர்சனம் மற்றும் வரவேற்பு ரீதியாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் முதல் இடத்தில் இருக்கிறது.