இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த 2016ஆம் வருடத்திற்கான கேரளா அரசின் திரைப்பட விருதுகள் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி உட்பட இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் வரை எவரும் கலந்து கொள்ளாதது முதல்வருக்கு வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அது விழாவில் அவர் பேசிய பேச்சிலும் வெளிப்பட்டது..
“இந்த விழாவிற்கு முறைப்படி, சம்பிரதாயப்படி அழைப்பு அனுப்பவில்லை என பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையா, அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. இது உங்களுக்கான விழா, இதில் நீங்களே கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால் எப்படி..?” என தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் முதல்வர் பினராயி விஜயன்.
இந்த விழாவில் கம்மட்டிப்பாடம் படத்தில் நடித்த விநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தில் நடித்த ரெஜிஷா விஜயனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் ஷோபனா, ரீமா கல்லிங்கல் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.