பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் தான் பல்சர் சுனில். இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின் இவருக்கு உதவி செய்துள்ளார் சிறைக்காவல் பணியில் இருந்த போலீஸ்காரரான அனீஸ் என்பவர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பென்ட் செய்துள்ளனர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்சர் சுனில் திலீப்பின் நண்பரான நாதிர்ஷாவை தொடர்பு கொண்டு டீலிங் பேசியதற்கும், திலீப்பிடம் போனில் பேச முயற்சி செய்ததற்கும், திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு சொந்தமான நிறுவனத்தில் உள்ள முக்கியமான நபர்களுடன் பேசுவதற்கும், சுனில் இருந்த காக்கநாடு சிறை வளாகத்தில் காவல் பணியில் இருந்த இந்த போலீஸ் அதிகாரி அனீஸ் உதவியாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.