டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் தான் பல்சர் சுனில். இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின் இவருக்கு உதவி செய்துள்ளார் சிறைக்காவல் பணியில் இருந்த போலீஸ்காரரான அனீஸ் என்பவர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பென்ட் செய்துள்ளனர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்சர் சுனில் திலீப்பின் நண்பரான நாதிர்ஷாவை தொடர்பு கொண்டு டீலிங் பேசியதற்கும், திலீப்பிடம் போனில் பேச முயற்சி செய்ததற்கும், திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு சொந்தமான நிறுவனத்தில் உள்ள முக்கியமான நபர்களுடன் பேசுவதற்கும், சுனில் இருந்த காக்கநாடு சிறை வளாகத்தில் காவல் பணியில் இருந்த இந்த போலீஸ் அதிகாரி அனீஸ் உதவியாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.