தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவுதமிபுத்ர சட்டகர்னி படத்தை அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பைசா வசூல் படத்தில் நடித்து வந்த பாலகிருஷ்ணா, தற்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது தந்தையான என்.டி.ராமாராவின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா. அந்த படத்தை சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்குகிறார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணா விடுத்துள்ள ஒரு செய்தியில், நான் யாருக்கும் ரசிகன் இல்லை. எனக்கு நானே ரசிகன். என் தந்தை என்.டி.ஆர்., நடித்த படங்களை பார்ப்பேன். அவர் எனக்கு கடவுள் மாதிரி. தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் நான், இதையடுத்து என் தந்தையின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறேன். அந்த படம் எனது சினிமா கேரியரில் மிக முக்கியமான படம். அதோடு, எனக்கு மனதளவில் திருப்தி தரப்போகிற படம் என்று கூறியுள்ளார் பாலகிருஷ்ணா.