ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவுதமிபுத்ர சட்டகர்னி படத்தை அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பைசா வசூல் படத்தில் நடித்து வந்த பாலகிருஷ்ணா, தற்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது தந்தையான என்.டி.ராமாராவின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா. அந்த படத்தை சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்குகிறார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணா விடுத்துள்ள ஒரு செய்தியில், நான் யாருக்கும் ரசிகன் இல்லை. எனக்கு நானே ரசிகன். என் தந்தை என்.டி.ஆர்., நடித்த படங்களை பார்ப்பேன். அவர் எனக்கு கடவுள் மாதிரி. தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் நான், இதையடுத்து என் தந்தையின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறேன். அந்த படம் எனது சினிமா கேரியரில் மிக முக்கியமான படம். அதோடு, எனக்கு மனதளவில் திருப்தி தரப்போகிற படம் என்று கூறியுள்ளார் பாலகிருஷ்ணா.