10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
ஆந்திராவைச் சேர்ந்தவர் பூனம் கவுர். தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சேவல், உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள், என்வழி தனி வழி, நாயகி படங்களில் நடித்தார்.
தற்போது நண்டு என் பிரண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆசாமி, இன்னாருக்கு இன்னாரென்று படத்தை இயக்கிய ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார். ஜித்தன் ரமேஷ், ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. ஒரு சிலநாட்கள் நடித்த நிலையில் நடிகை பூனம் கவுர் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு ஐதராபாத் சென்று விட்டார். இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு. "என்னால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது. மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை" என்றார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறியதாவது:
எங்கள் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க பூனம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒப்பந்தம் செய்யும்போது எனது உடைகளை நானே தேர்வு செய்கிறேன். அதற்கான பணத்தை கொடுத்து விடுங்கள் என்றார் நாங்களும் ஒப்புக் கொண்டோம். நாங்கள் எடுப்பது சிறு பட்ஜெட் படம். ஆனால் அவர் உயர்ரக ஆடைகளை கொண்டு வந்து அதிக பணம் கேட்டார். எங்களுக்கு அவ்வளவு பட்ஜெட் இல்லை என்றோம். அதிலிருந்து பிரச்சினை பண்ண ஆரம்பித்தார். நட்சத்திர ஒட்டலில்தான் அறை எடுத்துக் கொடுத்தோம். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்டார். இதனால் தயரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம். இதுகுறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்ய இருக்கிறோம் என்றார்.