நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப், கடந்த 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப் பலமுறை ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தும், அவருக்கு ஜாமின் தர கோர்ட் மறுத்து விட்டது.
தொடர்ந்து நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், திலீப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் தான் முக்கிய குற்றவாளிகள் என நிரூபிக்கும் வகையிலான சாட்சிகள், ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். இந்நிலையில், தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கேட்டு திலீப், சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தார்.
திலீப்பின் கோரிக்கையை ஏற்ற சிறை அதிகாரிகள் அவரை பரோலில் வெளியே விட அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, இன்று (செப்.,6) 2 மணிநேரம் பரோலில், திலீப் சிறையில் இருந்து வெளியே வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் தந்தையின் நினைவுநாள் காரியங்களில் கலந்துகொண்ட திலீப், அதன்பின் காலை உணவையும் அங்கேயே முடித்தார். சரியாக 9.45 மணியளவில் மீண்டும் போலீஸ் காவலுடன் ஆலுவா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் திலீப்.. அவர் வந்து சென்ற இந்த இரண்டு மணி நேரத்தில் போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் உயர் அதிகாரியின் ஆலோசனையின்படி நடக்கவேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. திலீப்பும் அதன்படியே நடந்துகொண்டார்.