இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகை விவகாரத்தில் கைதாகி கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கிறார் மலையாள நடிகர் திலீப். அவர் சம்பந்தப்பட்டது நடிகை விவகாரம் என்பதாலோ என்னவோ திரையுலகை சேர்ந்த யாரும் இதுவரை அவரை சிறையில் சென்று சந்திததாகவோ, ஆறுதல் கூறியதாகவோ தெரியவில்லை.. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் கூட சிறைக்கு சென்று அவராய் சந்திக்கவில்லை. இந்தநிலையில் சில தினகளுக்கு முன் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனும் திலீப்பின் மகள் மீனாட்சியும் அவரை சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்..
அதை தொடர்ந்து நடிகர் ஜெயராம் சிறையிலிருக்கும் திலீப்பை சந்தித்து ஓணம் வாழ்த்துக்களை கூறிவிட்டு பரிசளித்துவிட்டும் வந்துள்ளார். தடையை ஒருவர் உடைத்துவிட்டால், மற்றவர்களுக்கு அந்த பாதையில் செல்வது எளிது தானே. அந்தவகையில் மலையாள திரையுலக பிரபலங்களான இயக்குனர் ரஞ்சித்,, நடிகர்கள் ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் சாஜன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் திலீப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளனர்.