'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லிபர்ட்டி பஷீர்.. ஒருகாலத்தில் மலையாள தயாரிப்பாளர்களை எல்லாம் விதம்விதமாக விதிகள் புகுத்தி கதறடித்தவர் தான் கேரள தியேட்டர்ஸ் எக்சிபிடர்ஸ் சங்க தலைவராக இருந்த லிபர்டி பஷீர். இதனாலேயே அடிக்கடி தியேட்டர்களை போராட்டம் நடத்த வைத்து பலரின் அதிருப்தியை சம்பாதித்தவர்.. இவரை எதிர்த்துதான் நடிகர் திலீப் புதிதாக சங்கம் ஆரம்பித்துடன், லிபர்ட்டி பஷீரையும் சங்கத்தில் இருந்து நீக்கினார்..
தற்போது திலீப் நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி காவ்யா மாதவனை பற்றி குற்றவாளி பல்சர் சுனில் குறிப்பிட்டுள்ளார் அல்லவா..? இந்த நேரத்தில் உள்ளே நுழைந்த லிபர்ட்டி பஷீர், “காவ்யா மாதவனுக்கும் நடிகை விவகாரத்தில் தொடர்பு உள்ளது நன்றாகவே தெரிகிறது.. இதனால் காவ்யா மாதவனை கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தும் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் கரிசனம் காட்டுவது ஏன் என்பதுதான் எனக்கு புரியவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார். திலீப்பின் மீதான தனது பகை, கோபத்தின் விளைவாகத்தான் லிபர்ட்டி பஷீர் இப்படி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.