அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள சினிமா வரலாற்றை தொகுத்து புத்தகமாக எழுதினால் அதில் இயக்குனர் ஹரிஹரனுக்கு தனியாக ஒரு வால்யூமே போட வேண்டும். அந்த அளவுக்கு மலையாள சினிமாவுடன் இரண்டற கலந்துவிட்டவர் ஹரிஹரன். கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான 'பழசிராஜா'வை டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
1965ல் மலையாளம் சினிமாவில் நுழைந்தாலும் ஹரிஹரன் இயக்கிய முதல் படம் 1974ல் தான் வெளியானது. மூன்று முறை தேசிய விருதுகளையும், ஆறுமுறை கேரளா அரசின் விருதுகளையும் வென்றுள்ள இவர், மலையாள சினிமாவில் மிக அற்புதமான படைப்புகளை கொடுத்துள்ளார். இயக்குனர் ஹரிஹரன் மலையாள சினிமாவில் ஐம்பது வருடங்களை நிறைவுசெய்ததை பாராட்டி கோழிக்கோட்டில் அவருக்கு விழா எடுக்கப்பட்டது. இந்தவிழாவில் மம்முட்டி, இசைஞானி இளையராஜா, இயக்குனர் ஷ்யாம் பெனகல், இயக்குனரும் கதாசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர், ரசூல் பூக்குட்டி, மனோஜ் கே.ஜெயன் ஆகியோர் கலந்துகொண்டு ஹரிஹரனை வாழ்த்தினார்கள்.