தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த மாதம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே பிருத்விராஜ் நடித்த 'டியான்' என்கிற படம் வெளியானது. சகோதரர்களான பிருத்விராஜும், இந்திரஜித்தும் இணைந்து நடித்திருந்ததும், நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்தப்படத்தின் கதையை எழுதி இருந்தததுடன் படத்தில் வில்லனாக நடித்திருந்ததும், வட இந்திய மாநிலங்களின் பின்னணியில் இந்தப்படம் உருவாகி இருந்ததும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.. ஆனால் எதிர்பார்ப்பில் பாதியைக்கூட ஈடு செய்யமுடியாமல் படம் தோல்வியை தழுவியது..
இந்தநிலையில் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்துள்ள பிருத்விராஜ், “அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து உருவான இந்த கதையை வெகுஜன ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்க்க தவறிவிட்டோம். தவறு ரசிகர்கள் மீதல்ல.. எங்கள் மீதுதான்” என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, மோகன்லாலை வைத்து தான் இயக்க உள்ள 'லூசிபர்' படத்தின் கதையையும் இதே முரளிகோபி தான் எழுதுகிறார் என்பதால் அதை கமர்ஷியல் அம்சங்கள் மிஸ்ஸாகாதவாறு உருவாக்க வேண்டும் என ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்தி வருகிறாராம் பிருத்விராஜ்.