ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
வரும் ஆக-31ஆம் தேதி மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் திரைக்கு வர இருக்கிறது. மலையாள சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவரான லால் ஜோஸும் மோகன்லாலும் முதன்முறையாக இந்தப்படத்தில் கைகோர்த்திருப்பதால் இந்தப்படத்திற்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு எழுந்திருப்பது உண்மை. இந்நிலையில் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும் என கேரளவில் உள்ள சூர்யா ரசிகர் மன்றத்தினர் தங்களது வாழ்த்தை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளனர்.
சூர்யா தற்போது நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியானது இல்லையா..? அதில் இரண்டு விதமான கெட்டப்புக்களில் இருக்கும் சூர்யாவின் படங்களை தலைகீழாக வைத்து புதுமையான முறையில் போஸ்டரை டிசைன் பண்ணியிருந்தார்கள். மோகன்லாலும் இந்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதனால் சூர்யா பட போஸ்டர் பாணியில் மோகன்லாலின் இரண்டு கெட்டப்புகளையும் இணைத்து புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் கேரள சூர்யா ரசிகர்கள்.