இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மோகன்லால் நடிப்பில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் முதலில் ஆரம்பித்த படம் 'வில்லன்'. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் விஷால், ஹன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் கடந்த ஜூலை மாதமே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தாமதமானதால் இந்த ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக-31ஆம் தேதி வெளியாக இருப்பது லால்ஜோஸ் டைரக்சனில் முதன்முறையாக மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் தான். சொல்லப்போனால் 'வில்லன்' படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் தான் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தின் படப்பிடிப்பே ஆரம்பமானது.. லால்ஜோஸ் எப்போதுமே குறுகிய காலத்தில் பணிகளை முடிப்பதில் வல்லவர் என்பதால் அவர் முந்திக்கொண்டார் என்றே தெரிகிறது. அதேசமயம், வில்லன் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதால் தான் ரிலீஸ் தேதி தாமதமாகி வருகிறதாம்.