'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக நடித்து வரும் பிருத்விராஜ், அடுத்ததாக 'ஆடுஜீவிதம்' என்கிற கமர்ஷியல் அம்சங்கள் குறைவான கலைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் வரை வெவ்வேறு கட்ட படப்பிடிப்பாக நடைபெற இருக்கிறது. இதற்கிடையே பிருத்விராஜ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புராணப்படங்கள் இரண்டின் நிலை என்ன ஆகிற்று என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது..
அந்த இரண்டு படங்களில் ஒன்றுதான் முதன்முறையாக கடவுள் கிருஷ்ணரை ஹீரோவாக்கி 'ஸ்யாமாந்தகம் என்கிற படமாக உருவாக இருக்கிறது. அதில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிப்பதும் அதை 'பழசிராஜா' புகழ் ஹரிஹரன் இயக்குவதும் தான் ஹைலைட்.. மகாபாரத ஸ்ரீகிருஷ்ணரின் சொல்லப்படாத புது அவதாரம் ஒன்றை ரசிகர்களுக்கு விருந்தாக்க இருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப்படம் நிச்சயம் திரைக்கு வரும் என உறுதி அளித்துள்ளார் இயக்குனர் ஹரிஹரன்..
இன்னொரு படம் 'கர்ணன்'.. பிருத்விராஜுக்கு கடந்த 2015ல் 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஆர்.எஸ்.விமல் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். படத்தின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட 45 கோடி என்று சொல்லப்படுகிறது.. இந்தப்படத்திற்கான அறிவிப்பும் கடந்த ஜனவரியில் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டது.. இந்தப்படமும் முன் தயாரிப்பு நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆக கிருஷ்ணன், கர்ணன் என இரண்டு புராண புருஷர்களையும் பிருத்விராஜ் உருவத்தில் நாம் தரிசிக்கலாம் என்பது உறுதி.