தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகன் ஜூனியர் லால்.. இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக இருக்கிறார். அதான் ஏற்கனவே இயக்கிய வெற்றிப்படமான 'ஹனி பீ' படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஹனி பீ-2' என்கிற பெயரில் இயக்கியிருந்தார்.. அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது.. இந்த நிலையில் அந்தப்படத்தில் நடித்திருந்த ஒரு இளம் டிவி நடிகை பத்து லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாக ஒரு தகவல் வெளியானது..
அதை தொடர்ந்து இயக்குனர் மீதும் அந்தப்படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஷி மற்றும் டெக்னீசியன்கள் மூவர் மீதும் போலீசில் புகார் கொடுத்தார் சம்பந்தப்பட்ட நடிகை. அந்தப்புகாரில் தனக்கு பதிலாக, தனது அனுமதி இல்லாமல் வேறு ஒரு பெண்ணை வைத்து சில காட்சிகளை எடுத்து படத்தில் இணைத்துவிட்டார்கள் எனவும், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜூனியர் லால், தன்மீது தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தார் எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் அந்த நடிகை.
இந்த வழக்கில் ஜூனியர் லால் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என போலீசார் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடிகை இயக்குனர் மற்றும் மற்றவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதன்படி சம்பந்தப்பட்ட பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தாங்களே பேசி சுமுகமாக முடித்துக்கொண்டதாகவும், இனி இந்த விவகாரம் குறித்து தான் எந்த பிரச்சனையையும் எழுப்ப போவதில்லை எனவும் அவர் அதில் குறிப்பிட்டுளார். மேலும் இதை ஒரு அபிடவிட்டாக எழுதி ஜூனியர் லாலிடமும் ஒப்படைத்துவிட்டாராம் அந்த நடிகை.