ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகன் ஜூனியர் லால்.. இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக இருக்கிறார். அதான் ஏற்கனவே இயக்கிய வெற்றிப்படமான 'ஹனி பீ' படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஹனி பீ-2' என்கிற பெயரில் இயக்கியிருந்தார்.. அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது.. இந்த நிலையில் அந்தப்படத்தில் நடித்திருந்த ஒரு இளம் டிவி நடிகை பத்து லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாக ஒரு தகவல் வெளியானது..
அதை தொடர்ந்து இயக்குனர் மீதும் அந்தப்படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஷி மற்றும் டெக்னீசியன்கள் மூவர் மீதும் போலீசில் புகார் கொடுத்தார் சம்பந்தப்பட்ட நடிகை. அந்தப்புகாரில் தனக்கு பதிலாக, தனது அனுமதி இல்லாமல் வேறு ஒரு பெண்ணை வைத்து சில காட்சிகளை எடுத்து படத்தில் இணைத்துவிட்டார்கள் எனவும், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜூனியர் லால், தன்மீது தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தார் எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் அந்த நடிகை.
இந்த வழக்கில் ஜூனியர் லால் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என போலீசார் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடிகை இயக்குனர் மற்றும் மற்றவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதன்படி சம்பந்தப்பட்ட பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தாங்களே பேசி சுமுகமாக முடித்துக்கொண்டதாகவும், இனி இந்த விவகாரம் குறித்து தான் எந்த பிரச்சனையையும் எழுப்ப போவதில்லை எனவும் அவர் அதில் குறிப்பிட்டுளார். மேலும் இதை ஒரு அபிடவிட்டாக எழுதி ஜூனியர் லாலிடமும் ஒப்படைத்துவிட்டாராம் அந்த நடிகை.