இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிரஞ்சீவி, விஜயசாந்தியைத் தொடர்ந்து பவன் கல்யாணும் சமீபத்தில்தான் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அவர்களைத் தொடர்ந்து ரஜினியும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் புதிய கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார்.
கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் உபேந்திரா. தமிழில் விஷால் நடித்த சத்யம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் உப்பி ருப்பி -என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், கர்நாடகத்தில் வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தனி கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார் உபேந்திரா. மேலும், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு பலப்பரீட்சை காணப் போகிறாராம்.
இந்த தகவல் தற்போது ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ள உபேந்திரா, தன்னை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஊழலை ஒழிப்பதுதான் எனது முதல்வேலை என்றும் தெரிவித்துள்ளார்.