ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளம், தமிழை தொடர்ந்து, தற்போது நேரடி தெலுங்கு படமாக உருவாகும் 'மகாநதி' மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார் துல்கர் சல்மான். இந்தநிலையில் பாலிவுட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்துள்ளது. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஆரம்பத்தில் துல்கருக்கு பதிலாக அபிஷேக் பச்சன் தான் இந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்ததாம்.. ஆனால் அபிஷேக்கின் தேதிகள் ஒத்து வராததால், துல்கர் சல்மான் இந்தப்படத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளார்.. இந்த வாய்ப்பு துல்கரை தேடிவர அவர் நடித்த சார்லி படம் தான் காரணமாம்.
மணிரத்னம் படம் என்பதால் 'ஒ காதல் கண்மணி' படத்தை பார்த்த இயக்குனர் ஆகர்ஷ் குரானா, அதில் துல்கரின் நடிப்பு தன்னை ஈர்க்கவே தொடர்ந்து அவர் நடித்த படங்களை பார்க்க ஆரம்பித்தாராம். 'சார்லி' படத்தில் துல்கரின் மிகச்சிறப்பான நடிப்பை பார்த்தபோது தனது படத்திற்கு இவர் தான் செட்டாவார் என முடிவு செய்தாராம்.