ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கைதி எண்-150 படத்தை அடுத்து ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை அவரது மகனும், நடிகருமான ராம்சரண் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிக்க சில இந்திய பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், தற்போது அப்படத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சனும், நாயகியாக நயன்தாராவும் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதையடுத்து வில்லனாக நடிக்க சில நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டாரான நான் ஈ சுதீப் தற்போது கமிட்டாகியிருக்கிறார். ஏற்கனவே நான் ஈ படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த சுதீப், இந்த படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் ரிச்சாகி விடுவார் என்று கூறப்படுகிறது.