தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
போகும் இடமெல்லாம் பஹத் பாசிலின் பெருந்தன்மை பற்றி புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார் மலையாள சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சுராஜ் வெஞ்சாரமூடு. சமீபத்தில் பஹத் பாசில், சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்த 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என்கிற படம் வெளியானது. இதில் கிட்டத்தட்ட ஹீரோ வேடத்தில் சுராஜும், பஹத் பாசில் இரண்டாவது ஹீரோ போலவும் நடித்திருந்தார்கள்.. பஹத் பாசிலுக்கு ஜோடி இல்லை, பாடல் இல்லை.. ஆனால் சுராஜுக்கு இந்த இரண்டுமே கிடைத்திருந்தது.
படத்தின் இயக்குனர் திலீஷ் போத்தன் முதலில் இந்த இரண்டு பேரின் கேரக்டரையும் மாற்றிக் கொடுப்பதாகத்தான் திட்டம் வைத்திருந்தாராம். ஆனால் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தில் சுராஜின் கண்கலங்க வைக்கும் நெகிழ்வான நடிப்பை பார்த்துவிட்டுத்தான், பஹத் பாசில் கேரக்டரை அவருக்கு கொடுத்தாராம்.. எந்த கேரக்டரை எனக்கு கொடுத்தாலும் சரி, அதில் நான் தனித்து தெரியும்படி பார்த்துக்கொள்வேன் என கூறிய பஹத் பாசிலும் பெருந்தன்மையுடன் தனது கேரக்டரை சுராஜுக்கு விட்டுக்கொடுத்தராம். ஒரு ஹீரோ, கதையின் தன்மை உணர்ந்து இந்த அளவுக்கு இறங்கிவருவது ரொம்பவே அரிதான விஷயம் என பஹத் பாசிலை பாராட்டுகிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.