தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வளர்ந்து வந்த கன்னட இளம் நடிகர் துருவா சர்மா. இவர் நடிகை அபிநயா போன்று காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஆனாலும் அது வெளியில் தெரியாத வண்ணம் மிக அற்புதகமாக நடித்து வளர்ந்து வந்தார். சிநேகாஞ்சலி, நீனந்தரரே நனகிஸ்டா, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பிசியாக நடித்தும் வந்தார். இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட 2005ம் ஆண்டு நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.
நேற்று வீட்டில் இருந்த சர்மா திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் துருவா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துருவாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவரது உடலுக்கு சிவராஜ்குமார், பிரேம், யோகிஷ், ஜக்கேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்த துருவா, அதில் பெரும் நஷ்டத்தை சந்தித்தாகவும் இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றே துருவாவின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.