ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் திலீப் கைதானதும் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துபோனதென்னவோ உண்மை தான். அதனால் தான் மம்முட்டி, மோகன்லால் உட்பட சீனியர் நடிகர்கள் கூட, நடிகர் சங்க பொதுக்குழு என்கிற பெயரில் கருத்துக்களை தெரிவித்ததோடு மட்டும் நின்றுவிட்டார்கள்.. திலீப்புக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.. ஒருசில சிறிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மட்டுமே தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
அந்தவகையில் திலீப் விவகாரம் குறித்து, பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் தற்போது தனது கருத்துக்களை கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீனிவாசன், “இப்படியெல்லாம் செய்தால் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாத அளவுக்கு திலீப் ஒன்றும் முட்டாள் அல்ல. அவருடன் பழகிய காலத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் நன்கு ஆலோசித்து முடிவெடுப்பதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்” என கூறியவர், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து அதிகம் பேச மறுத்துவிட்டார்.