தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
கேரளாவில் அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் கேரளாவில் 200 தியேட்டர்களுக்கு குறையாமல் தான் விஜய் படங்கள் ரிலீஸாகும். நம் தமிழ் ரசிகர்களுக்கு இணையாக கட் அவுட் வைப்பது, சுவர் விளம்பரம், பஸ் விளம்பரம் என கலக்குகிறார்கள். அதனால் விஜய் படங்களின் கேரள உரிமையை கைப்பற்ற அங்கேயும் சில நிறுவனங்களுக்குள் போட்டாபோட்டி நடப்பது வாடிக்கைதான்.
அந்தவகையில் அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் 'மெர்சல்' படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது குளோபல் மீடியா நிறுவனம்.. இதுவரை விஜய் படங்கள் கேரளாவில் விற்பனையானதை விட மிகப்பெரிய தொகையை கொடுத்து கைப்பற்றியுள்ளது குளோபல் மீடியா. இந்த நிறுவனம் தான் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் கேரளாவில் வெளியிட்டு செமத்தியாக கல்லா கட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தீபாவளி ரிலீஸாக வெளியாகும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆக-20ஆம் தேதி நடைபெறவுள்ளது.