Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப்பின் நில விவகாரத்தை கவனித்துக்கொண்ட பல்சர் சுனில்?

18 ஜூலை, 2017 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Pulsar-sunil-gang-manage-dileeps-land

தற்போது நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திலீப் பற்றி அடுக்கடுக்கான அதிரடி செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றாக, ஏற்கனவே தனக்கு சொந்தமான டி சினிமாஸ் தியேட்டருக்காக அருகிலிருக்கும் ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அபகரித்தார் என்கிற குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருக்கும் குமரகோம் பகுதியில் திலீப்புக்கு சொந்தமான நிலம் ஒன்று விற்கப்பட்டதிலும் இதேபோன்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

குமரகோம் பகுதியில் திலீப் 2007ல் சென்ட் 90 ஆயிரம் என்கிற விலையில் சில ஏக்கரில் நிலத்தை வாங்கினாராம்.. பின் சில வருடங்களுக்கு முன்பு அதை சென்ட் 4.8 லட்ச ரூபாய் என்கிற விலையில் இன்னொருவருக்கு விற்றுவிட்டாராம். இவர் விற்ற நிலத்தின் மொத்த அளவு 2.5 ஏக்கர். ஆனால் இதில் அரசுக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து தன்னுடைய நிலத்தில் இணைத்து மொத்தமாக இணைத்து விற்பனை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் இன்னொரு அதிரவைக்கும் தகவல் என்னவென்றால் நடிகை விஷயத்தில் முதன்மை குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனில் யாரென்றே தனக்கு தெரியாது என இப்போதும் திலீப் மறுத்துக்கொண்டிருக்கிறார் அல்லவா..? ஆனால் இந்த நில டீலிங் விஷயத்தை கவனித்துக்கொண்டதே பல்சர் சுனிலும் அவனது ஆட்களும் தானாம். அந்தபகுதியை சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் இந்த நில விவகாரத்தில் உண்மையை கண்டறிய களம் இறங்கியபோது பல்சர் சுனிலின் ஆட்களால் மிரட்டப்பட்டார்களாம்.

அதனால் இந்த நிலம் பற்றி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கூட, புகார் அளித்த நபர் இந்த வழக்கில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டாராம்.. ஆனாலும் நீதிமன்றம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி அந்த நிலத்தை ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட நிலத்தை மீட்க ஒரு சிறப்பு தாசில்தாரை நியமனம் செய்ததாம். ஆனாலும் ரெவென்யூ அதிகாரிகள் இதில் தலையிட்டு அந்த விவகாரத்தை அப்படியே அமுக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in