இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தற்போது நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திலீப் பற்றி அடுக்கடுக்கான அதிரடி செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றாக, ஏற்கனவே தனக்கு சொந்தமான டி சினிமாஸ் தியேட்டருக்காக அருகிலிருக்கும் ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அபகரித்தார் என்கிற குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருக்கும் குமரகோம் பகுதியில் திலீப்புக்கு சொந்தமான நிலம் ஒன்று விற்கப்பட்டதிலும் இதேபோன்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
குமரகோம் பகுதியில் திலீப் 2007ல் சென்ட் 90 ஆயிரம் என்கிற விலையில் சில ஏக்கரில் நிலத்தை வாங்கினாராம்.. பின் சில வருடங்களுக்கு முன்பு அதை சென்ட் 4.8 லட்ச ரூபாய் என்கிற விலையில் இன்னொருவருக்கு விற்றுவிட்டாராம். இவர் விற்ற நிலத்தின் மொத்த அளவு 2.5 ஏக்கர். ஆனால் இதில் அரசுக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து தன்னுடைய நிலத்தில் இணைத்து மொத்தமாக இணைத்து விற்பனை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் இன்னொரு அதிரவைக்கும் தகவல் என்னவென்றால் நடிகை விஷயத்தில் முதன்மை குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனில் யாரென்றே தனக்கு தெரியாது என இப்போதும் திலீப் மறுத்துக்கொண்டிருக்கிறார் அல்லவா..? ஆனால் இந்த நில டீலிங் விஷயத்தை கவனித்துக்கொண்டதே பல்சர் சுனிலும் அவனது ஆட்களும் தானாம். அந்தபகுதியை சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் இந்த நில விவகாரத்தில் உண்மையை கண்டறிய களம் இறங்கியபோது பல்சர் சுனிலின் ஆட்களால் மிரட்டப்பட்டார்களாம்.
அதனால் இந்த நிலம் பற்றி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கூட, புகார் அளித்த நபர் இந்த வழக்கில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டாராம்.. ஆனாலும் நீதிமன்றம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி அந்த நிலத்தை ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட நிலத்தை மீட்க ஒரு சிறப்பு தாசில்தாரை நியமனம் செய்ததாம். ஆனாலும் ரெவென்யூ அதிகாரிகள் இதில் தலையிட்டு அந்த விவகாரத்தை அப்படியே அமுக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.