ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகர் பிருத்விராஜ், தான் பங்குதாரராக இருந்த ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மலையாள திரையுலகில் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது தான் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் இவர்களது நண்பரான ஷாஜி நடேசன் ஆகியோர் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள். இதில் ஆர்யா இந்த நிறுவனம் ஆரம்பித்தபின் தானும் ஒரு பங்குதாரராக சேர்ந்துகொண்டவர்.
இந்த நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக சில மாதங்களுக்கு முன் வெளியான மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படம் சூப்பர்ஹிட் ஆகி நன்றாக வசூலித்த நிலையிலும், பிருத்விராஜ் இந்த நிறுவனத்தில் இருந்து விலகினார், தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருவதால் ஏற்பட்ட பணிச்சுமை மற்றும் கூடுதலாக மோகன்லால் படத்தின் மூலம் டைரக்சன் பொறுப்பை ஏற்க இருப்பது ஆகிய காரணங்களால் தான் விலகினார் என சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது தனது சகோதரரும் நடிகருமான இந்திரஜித்துடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்க இருப்பதாகவும், அதனால் தான் அவர் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனத்தில் இருந்து விலகியதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சகோதரர்கள் இருவரின் தாயாரான மல்லிகா சுகுமாரனும் ஒரு பங்குதாரராக இணைய இருப்பதாகவும், அடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க இருக்கும் படத்தின் மூலம் தங்கள் முதல் தயாரிப்பை துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.