'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலையாள நடிகர் திலீப் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்படுவதும் பின் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதையும் பார்க்கும்போது, எப்படி இருந்த மனிதன் இப்படி நிலைக்கு ஆளாகிட்டாரே என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.. ஆனால் போலீஸ் வட்டாரத்திலோ திலீப் சில போலீசாரிடம் எதார்த்தமாக பேசிக்கொண்டு, அவ்வப்போது ஒன்லைன் காமெடி பஞ்ச்'களை கூறி சிரிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,..
குறிப்பாக அவரது அரெஸ்ட் பற்றி சிறையில் இருந்த போலீஸாரில் சிலர் வருத்தத்துடன் அவரிடம் விசாரித்தார்களாம். ஆனால் அவரோ தனது படங்களில் பேசுவது போலவே, “நான் ஆண்டவனிடம் எனக்கு பத்துநாள் ரெஸ்ட் கொடு என கேட்டேன்.. அது அவர் காதில் அரெஸ்ட் என விழுந்து விட்டது போல.. அதனால் பத்துநாள் அரெஸ்ட் தந்துவிட்டார்” என சிரித்துக்கொண்டே கூறினாராம்.