தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் திலீப், நடிகையை ஆள்வைத்து கடத்தி பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திலீப்பிடம் நேற்று மாலைவரை போலீஸ் காவலில் விசாரணை நடந்தது.. அதன்பின் நீதிமன்றம் அனுமதித்த போலீஸ் காவலுக்கான அனுமதி நேரம் முடிந்ததும் அவர் ஆலுவா சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். அவர் சிறைக்கு கொண்டுவரப்பட்டபோது நேரம் மாலை 5.35 மணி..
சிறையை பொறுத்தவரை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 'வீக் என்ட்' என்கிற முறையில் கைதிகளுக்கு மட்டன் உணவு வழங்கப்படும்.. இதற்காக நான்கு மணிக்கே கைதிகளுக்கான ரோல்கால் நடத்தப்பட்டு யார் யாருக்கு மட்டன் தேவை என கணக்கெடுத்து, அதற்கேற்ற அளவில் தான் சமைக்கப்படுமாம். நேற்று திலீப் தாமதமாக சிறைக்கு வந்ததால் அவருக்கு மட்டன் வழங்கப்படவில்லையாம்.. சாதாரண உணவே வழங்கப்பட்டதாம். அருகில் இருந்த சில கைதிகள் தங்களுடைய மட்டன் உணவை திலீப்பிற்கு தர முன்வந்தபோதும் திலீப் அதை மறுத்துவிட்டாராம்.