டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள நடிகர் திலீப், நடிகையை ஆள்வைத்து கடத்தி பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திலீப்பிடம் நேற்று மாலைவரை போலீஸ் காவலில் விசாரணை நடந்தது.. அதன்பின் நீதிமன்றம் அனுமதித்த போலீஸ் காவலுக்கான அனுமதி நேரம் முடிந்ததும் அவர் ஆலுவா சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். அவர் சிறைக்கு கொண்டுவரப்பட்டபோது நேரம் மாலை 5.35 மணி..
சிறையை பொறுத்தவரை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 'வீக் என்ட்' என்கிற முறையில் கைதிகளுக்கு மட்டன் உணவு வழங்கப்படும்.. இதற்காக நான்கு மணிக்கே கைதிகளுக்கான ரோல்கால் நடத்தப்பட்டு யார் யாருக்கு மட்டன் தேவை என கணக்கெடுத்து, அதற்கேற்ற அளவில் தான் சமைக்கப்படுமாம். நேற்று திலீப் தாமதமாக சிறைக்கு வந்ததால் அவருக்கு மட்டன் வழங்கப்படவில்லையாம்.. சாதாரண உணவே வழங்கப்பட்டதாம். அருகில் இருந்த சில கைதிகள் தங்களுடைய மட்டன் உணவை திலீப்பிற்கு தர முன்வந்தபோதும் திலீப் அதை மறுத்துவிட்டாராம்.