பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாவனா விவகாரத்தில் திலீப்பின் கைது செய்யப்பட்டுள்ளது, அவரது படத்தயாரிப்பாளரான தோமிச்சன் முலக்குப்பாடம் என்பவரை ஆரம்பத்தில் சற்றே கலவரப்படுத்தியது. மோகன்லாலின் 'புலி முருகன் படத்தை தயாரித்த இவர் தான், திலீப் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ராம்லீலா படத்தை தயாரித்துள்ளார். திலீப்பிற்கு எதிராக மட்டுமல்லாமல் தனது படத்தை முடக்குவதற்கான வேலை என்று கூட ஆரம்பத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
ஆனால் தற்போது 'ராம்லீலா' படத்தை வரும் ஜூலை-21-ம் தேதி வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். திலீப் ஒருவரின் உழைப்பு மட்டுமே இந்தப்படத்தில் இருக்கிறதா என்ன..? கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் இந்தப்படத்தில் தங்களது உழைப்பை கொட்டியுள்ளார்கள்.. அதனால் திலீப் மீதான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் இந்தப்படத்தை பாதிக்காது. எப்படி 'புலி முருகன்' வெகு ஜனங்களை வசீகரித்து தியேட்டருக்கு அழைத்து வந்ததோ, அதேபோல 'ராம்லீலா' படத்திற்கும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கையாக இருக்கிறார்.