‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகை பாவனா விவகாரத்தில் திலீப்புடன் சேர்த்து அவரது மனைவி காவ்யா மாதவனும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் காவ்யா மாதவன் நடத்தி வரும் நிறுவனத்தில் கூட போலீஸார் சோதனையெல்லாம் நடத்தினார்கள். இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி கொடுங்கோலூர் பகவதி கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்திருக்கிறார்கள் திலீப்பும், காவ்யா மாதவனும்.
நிலைமை இப்படி இருக்க, கடும் வெயிலில் ஒரு சாரல் மழை என்று சொல்லத்தோன்றும் வகையில் மெல்போர்னில் நடைபெற இருக்கும் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுக்காக காவ்யா மாதவன் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி பிளாப் ஆன 'பின்னேயும்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகத்தான் அவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, மற்ற விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள் முழுவதும் பாலிவுட்காரர்களாகவே இருக்க, காவ்யா மாதவன் ஒருவர் மட்டும் தான் தென்னிந்திய சினிமாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.