ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியில் தொடர்ச்சியாக படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவாவுக்கு சில படங்கள் அதிர்ச்சி தோல்வி கொடுக்கவே அங்கிருந்து இடம்பெயர்ந்து மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்து நடிகராகி விட்டார். அந்த வகையில், தேவி படத்திற்கு பிறகு யங் மங் சங், மெர்லின், குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக விஷால், கார்த்தியை நாயகர்களாக வைத்து கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை இயக்குகிறார்.
மேலும், தற்போது கொலையுதிர் காலம் படத்தின் இந்தி பதிப்பில் தேவி படத்தைத் தொடர்ந்து மீண்டும் தமன்னாவுடன் இணைந்து நடித்து வருகிறார் பிரபுதேவா. கமோஷி என்ற அந்த படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதற்கு முன்பு இந்தியில் பிரபுதேவா இயக்கிய ஆக்சன் ஜாக்சன் படத்திலும் நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் பிரபாஸ்.
இந்த நிலையில், ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ள பிரபு தேவா, அடுத்து ஒரு நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க வைக்கிறாராம். ஆக, பிரபுதேவா படத்தில் மூன்றாவது முறையாக நடிக்கப்போகிறார் பிரபாஸ்.