தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை பாவனா கடத்தல் விவகாரம் சில மாதங்களாக அமுங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.. இதற்கு காரணம் பாவனா கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனி(ல்) என்பவன், நடிகர் திலீப்புக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு உள்ளதுபோல எழுதியதாக சொல்லப்பட்ட கடிதம் தான். இதனால் தற்போது திலீப்பை நோக்கி அனைவரின் கவனமும் திரும்பிய நிலையில், இந்த விவகாரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என அவர் மறுத்துள்ளார்.. மேலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு கூட தான் தயார் என கூறியுள்ளார்.
இந்தநிலையில் புலிமுருகன் பட தயாரிப்பாளர் தோமிச்சன் முலக்குப்படம், தற்போது இந்த விவாகரம் இப்போது மீண்டும் திடீரென எழும்பியதற்கு காரணம் இருக்கிறது என கூறியுள்ளார். இதில் குறிவைக்கப்பட்டுள்ளது திலீப் மட்டுமல்ல, தானும் தான் என ஒரு பகீர் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். காரணம் தற்போது திலீப் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'ராம்லீலா' படத்தை தயாரித்துள்ளது இவர் தான்.. 'புலி முருகன்' படம் மூலம் இவர் நல்ல லாபம் சம்பாதித்து இன்டஸ்ட்ரியில் சிலரது கண்களை உறுத்தி வந்ததாகவும், சமயம் பார்த்து பாவனா விவகாரத்தில் மீண்டும் திலீப்பை உள்ளே இழுத்து அவரது இமேஜை குலைப்பதன் மூலம் 'ராம்லீலா' படத்தை ஓடவிடாமல் செய்யும் உள்ளடி வேலைகளும் நடக்கின்றன என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.