‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
கடந்த பிப்ரவரியில் வெளியான 'எஸ்றா' படத்தை தொடர்ந்து பிருத்விராஜ் நடிப்பில், வரும் ஜூன்-29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'தியான்'. தனது சகோதரர் இந்திரஜித் மற்றும் நண்பர் முரளி கோபி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். வடமாநிலங்களில் வரலாற்று பின்னணி கொண்ட நகரங்களில் இதன் கதையும், கதைக்களமும் அமைந்துள்ளது. அதனால் இந்தப்படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் படத்தின் துவக்கத்திலும் அவ்வப்போது இடையில் சில இடங்களிலும் விளக்கப்படுத்தி கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல ஒரு கம்பீரமான பின்னணி குரல் தேவைப்பட்டது..
அந்தவிதமாக இந்தப்படத்திற்கு வாய்ஸ் கொடுத்திருப்பவர் சாட்சாத் மோகன்லாலே தான். பிருத்விராஜ் வைத்த வேண்டுகோளை ஏற்று மோகன்லால் இந்த உதவியை செய்துள்ளார்.. இதற்கு முன் மேஜர் ரவி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'பிக்கெட்-43' படத்திலும் மோகன்லால் வாய்ஸ் கொடுத்திருந்தார். அது மேஜர் ரவியின் நட்புக்காக, ஆனால் இந்தமுறை பிருத்விராஜ் படத்திற்கு வாய்ஸ் கொடுத்ததில் ஸ்பெஷல் காரணம் உண்டு.. ஆம்.. பிருத்விராஜ் டைரக்சனில் அடுத்ததாக 'லூசிபர்' என்கிற படத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதும், இந்த 'தியான்' படத்திற்கு கதையெழுதிய முரளிகோபி தான் அந்தப்படத்துக்கும் கதையெழுதி இருப்பதும் மோகன்லாலை எந்த மறுப்பும் சொல்லாமல் வாய்ஸ் கொடுக்க வைத்துவிட்டதாம்.